குரேஷியா நாட்டு அணியின் முன்னாள் பயிற்சியாளரான இகோர் ஸ்டிமேக் இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டாண்டைன் விலகியதிலிருந்து இந்திய அணி முறையான பயிற்சியாளர் இன்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய ஆடவர் கால்பந்து அணிக்காக பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின்(AIFF-All India Football Federation) அறிவுசார் குழு கடந்த சில வாரங்களாக செய்து வந்தது. இறுதியாக அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் அறிவுசார் குழு குரேஷியா நாட்டு முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக்கை தேர்வு செய்துள்ளது. இவர் அடுத்த 2 வருட காலத்திற்கு இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இகோர் ஸ்டிமேக் கடந்த 2012லிருந்து 2014ம் ஆண்டு வரை குரேஷிய நாட்டு அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர். இவர் கடந்த 1998ல் FIFA உலகக்கோப்பை தொடரில் 3ம் இடம் பிடித்த குரேஷிய அணியில் விளையாடியவர்.