tamilnadu

img

அரசு அதிகாரி உறுதியை ஏற்று சுடுகாட்டில் தஞ்சமடைந்த போராட்டம் நிறுத்தம்

உத்திரமேரூர், டிச. 16- புதியதாக துவங்கப்பட்ட கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 4  ஆவது நாளாக சுடுகாட்டில் தஞ்ச மடைந்தப் போராட்டம்  சார் ஆட்சிய ரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  உத்திரமேரூர் அடுத்த பழவேறி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அருங்குன்றம், மதூர், பினாயூர் ஆகிய கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் இயங்கி வரு கின்றது. இக்கல்குவாரிகள் அருகே பல்வேறு கல்அரவை தொழிச்சாலை கள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் பூமியிலிருந்து கற்கள் பெயர்த்தெடுக்க வெடி வைக்கப்படுகிறது. இதனால் அதிர்வு ஏற்பட்டு அருகே உள்ள வீடுகளில் விரிசல் விடுகிறது. மேலும் கல்குவாரி களுக்கு வரும் லாரிகளால் கிரா மப்புற சாலைகள் பழுதடை ந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்களின் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே புதிய கல்குவாரி மாவட்ட நிர்வா கத்தின் அனுமதியுடன் துவக்க ப்பட்டது. பின்னர் டிசம்பர் 13 ஆம் தேதி குவாரியில் மணல் எடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதை கண்டித்தும், கல்குவாரி நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பழவேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் கிராம மக்கள் சுடு காட்டில் தஞ்சமடையும் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தொடர்ந்து திங்களன்று 4வது நாளாக நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு விவ சாய சங்க  மாவட்டச் செயலாளர் நேரு திங்களன்று (டிச.16) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னை யாவை நேரில் சந்தித்து பேசினர்.  இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் சரவணன் பொதுமக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் குவாரி மூடுவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் பாஸ்கர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே. நேரு , சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனன், வட்டச் செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.