tamilnadu

வட்டாட்சியர்கள் இடமாற்றம்

செங்கல்பட்டு, அக்.24-  காஞ்சிபுரம் மாவட்டம் வருவாய்த்துறையில் பணியாற்றிய வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- சென்னை - சேலம் விரைவுச் சாலை நில எடுப்பு  தனி  வட்டாட்சியர் ஜி.காமாட்சி, மாம்லபுரம் - புதுச்சேரி விரைவுச் சாலை திட்ட தனி வட்டாட்சியராகவும், ஒரகடம் விரிவாக்கத் திட்ட தனி வட்டாட்சியர் பிரபாகரன் திருப்பெரும்பதூர் சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியராகவும், ஒரகடம் விரிவாக்கத் திட்ட அலகு ஒன்று தனி வட்டாட்சியர் கவுசல்யா ஒரகடம் விரிவாக்கம் அலகு 2க்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், திருக்கழுக்குன்றம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வாசுதேவன், சென்னை - சேலம் விரைவுச் சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், பெங்களுர் சென்னை விரைவுச் சாலை தனிவட்டாட்சியர் வரதராஜன் சென்னை சேலம் விரைவுச் சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராகவம், சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சுந்தர், செய்யூர் வட்டாட்சியராகவும், செய்யூர் வட்டாட்சியர் செந்தில் குமார் திருப்போரூர் வட்டாட்சியராகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், திருப்போரூர் வட்டாட்சியராக இருந்த ராஜேந்திரன் சென்னை சேலம் விரைவுச் சாலை அலகு 4 க்கும், சென்னை சேலம் விரைவுச் சாலை அலகு 4 ல் பணியாற்றிய ஏகாம்பரம் திருக்கழுக்குன்றம் வட்டாட்சிய ராகவும், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியராக பணியாற்றி தங்கராஜ் தாம்பரம் வட்டாட்சியராகவும், தாம்பரம் வட்டாட்சியர் சாந்தகுமாரி காஞ்சிபுரம் வட்டாட்சியராகவும், காஞ்சிபுரத்தில் பணியாற்றிய ரமணி திருப்பெரும்பதூர் வட்டாட்சியராகவும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.