tamilnadu

img

தேர்வில் தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தண்டரை புதுச்சேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மதுராந்தகம் அருகே உள்ளது தண்டரை புதுச்சேரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மாணவி 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார், இந்நிலையில் இன்று தமிழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் அந்த மாணவி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


;