உத்திரமேரூர், டிச.18- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் வட்டத்திற்குட்பட்ட குறும்பரைக் கிராமத்தைச் சேர்ந்த வர் சத்யா. பொற்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, களக்கா கடி கிராமத்தைச் சேர்ந்த நதியா ஆகியோர் சுய உதவிக் குழுவின் மூலம் மருதம் வேளாண்மை தற்சார்பு கம்பெணி என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுச் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மருதம் நிதி நிறுவனத்தினர் பெறாத கடனை கட்ட வலியுறுத்தி சத்யா, நதியா, ஆரோக்கியமேரி ஆகியோரை தனியறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி கடனை கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். மேலும் பத்திரத்தில் கடனை திருப்பித் தர வேண்டும் என எழுதி வாங்கியுள்ளதாகவும் கூறப்படு கிறது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட3 பேரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது:- 2016 ஆம் ஆண்டு கடன் நிலுவை யில் இருப்பதாக கடந்த ஜூன் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கூட்டுச்சாலையில் உள்ள கடைக்கு அழைத்திருந்தனர். நாங்களும் சென்றோம். கடைக்கு செல்வதற்கு முன்பு நிறுவனத்தின் நிர்வாகி நாராய ணன், எங்களை வெள்ளப்புத்தூர் கிராமம் சுக்கான் கொள்ளை காட்டுப்பகுதியில் உள்ள அலுவல கத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு எங்களை ஒரு அறையில் அடைத்தார். அப்போது அந்த அறை யில் இருந்த 13 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் எங்களைக் கடுமை யாகத் தாக்கினர். அப்போது, ‘எங்கள் நிறுவன த்திற்கு பல லட்ச ரூபாய் வாங்கிய கடனை திருப்பித் தரவேண்டும். பணத்தை உடனடியாக கட்ட வேண்டும்’ எனக் கூறி எங்களை தாக்கினர். மேலும் தகாத வார்த்தை யில் திட்டினர். மருதம் நிறுவனத்தின் நிர்வாகி கள் ஏழுமலை, வெற்றிவேல், சுப்பிரமணி, நாராயணன், மூர்த்தி பிரபாகரன், உள்ளிட்டவர்கள் எங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். மேலும் நிர்வாண மாக படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டினர். மேலும் நாங்கள் வாங்காத கடனை நாங்கள் வாங்கியதாகப் பத்திரத்தில் கையெழுத்தும் பெற்றுக் கொண்டனர். இதை வெளி யில் சொன்னால் உங்களையும், குடும்பத்தையும் கொன்று விடுவ தாக மிரட்டினர். பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த நதியாவின் கணவர் எங்களை மீட்டு அழைத்துவந்தார். எங்கள் பெயரில் கடனை வாங்கி அவர்களே எடுத்துக் கொண்டு நாங்கள் வாங்கியதாகவும், அந்த பணத்தைக் கட்ட வேண்டும் எனவும் மிரட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்டம் முழுவதும் பல நிதி நிறுவனங்கள் சுய உதவிக்குழுக்க ளிடம் பணத்தைக் கடனாகக் கொடுத்து கராறாக வசூல் செய்வதும், பெண்கள் பெயரில் கடனை வங்கியில் நிதி நிறு வனங்களே வாங்கிக் கொள்வது தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை அரசு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனிடம் கேட்டபோது, மருதம் தனியார் நிதி நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யது விசாரித்து வருவதாகக் கூறினார்.