கல்பாக்கம், செப்.25- காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் குப்பம் மற்றும் வாயலூர் ஊராட்சி க்குட்பட்ட உய்யாலி குப்பம் ஆகிய பகுதிகளில், கடந்த இரண்டு மாதங்களாக கடல் சீற்றத்தினால் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், கரைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் தங்களின் படகுகளை நிறுத்த இட மில்லாமல் அவதிப்படு கின்றனர். இந்நிலையில், கடல ரிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு களை காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம் மற்றும் செய்யூர் சட்டன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், கடலரிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது, வழக்கமாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடலரிப்பினால் பாதிப்பு ஏற்படும். ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் கடல்நீர் முன்னேறி வந்துள்ள தாகவும். இதனால், படகு களை நிறுத்த இடமில்லா மல் கரைகள் சேத மடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து கடல்நீர் முன்னேறி வருவ தால் இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி நீண்டகால கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர். அப்போது செல்வம் எம்பி, ‘மத்திய மீன்வளத்துறை அமைச்சக த்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக’ தெரிவித்தார்.