tamilnadu

img

கல்குவாரி லாரிகளால் சாலைகள் சேதம்

காஞ்சிபுரம், பிப்.6- காஞ்சிபுரத்தில் பிரதான சாலை யில் சென்றால் காவல்துறையினர் மடக்கு கிறார்கள் என்பதற்காக மக்கள் குடியிருப்பு வழியாக உட்புறச்  சாலையை பயன்படுத்தி அதிவேக மாக செல்லும் லாரிகளால் அப்பகுதி  சாலைகள் கடும் சேதத்திற்கு உள்ளாகி குண்டும் குழியுமாக காட்சி யளிக்கிறது. காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதிகளில் கல்குவாரிகள் அதிகம் உள்ளன. பல கல்குவாரிகள் அனுமதி யின்றி நடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. அனுமதியின்றி நடத்தபடக்  கூடிய குவாரிகளின் கற்களையும், எம்சேண்ட் மணலையும் எடுத்துச் செல்ல பிரதான போக்குவரத்து சாலையை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். ஏனென்றால், தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் காவல்துறையினர் கண்ணில் படாமல் இருப்பதற்காக நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தின் உட்புற சாலைகளை தேர்ந்தெடுத்து அவ் வழியே சென்று வருகின்றனர்.உத்திர மேரூர், ஆர்ப்பாக்கம், மாகரல் பகுதி களின் குவாரிகளில் இருந்து  குருவி மலை வழியாக ஓரிக்கை சென்று அங்கிருந்து செவிலிமேடு, தூசி, மாமண்டூர், வெம்பாக்கம் பகுதி களுக்கும், காஞ்சிபுரம் நகரம், பாலுசெட்டி, டோல்கேட், நத்தப்பேட்டை, வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கும் லாரிகளில் குவாரி பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.இதுபோன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு எங்கெங்கு சந்து பொந்து கிடைக்குமோ அங்கெல்லாம் சென்று  சரக்கை இறக்கி வருகின்றனர். இதேபோல,காஞ்சிபுரம் ஓரிக்கை  அண்ணாநகர் பகுதியில் மாவட்ட பதிவுத் துறை அலுவலகம் இருக்கி றது. இதனருகில் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி, ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளி களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று  வருகின்றனர். பள்ளிகள் உள்ள இந்தச் சாலையை மாகரல் பகுதியி லுள்ள கல்குவாரிக்குச் செல்லும்  லாரிகளே அதிகம் பயன்படுத்து கின்றன. அவை அதிக எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்வதால் இந்தச் சாலை மிகவும் மோசமான நிலைக்கு மாறிவிட்டது.  இது குறித்து இந்தப் பகுதி மக்கள் கூறுகையில், மாகரல் செல்வதற்கு உத்திரமேரூர் சாலை யையே பயன்படுத்தலாம். அங்கு  காவலர்கள் ரோந்து வருவார்கள் என்பதால் கல்குவாரி லாரிகள்  இந்தச் சாலையை பயன்படுத்து கின்றனர். இவர்கள் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து இந்தச்  சாலை வழியாகச் சென்று தேனம் பாக்கம் அருகே உத்திரமேரூர் சாலையை பிடித்து அங்கிருந்து மாகரல் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் லாரிகள் அதிக எடையுள்ள கற்களை ஏற்றிச்  செல்வதால் இந்தச் சாலை மோச மாக சேதமடைந்துள்ளது. மேலும்  பள்ளி மாணவர்கள் அதிகம் செல்லும் இந்தச் சாலையில் அதிக வேகத்துடன் கல்குவாரிகள்  லாரி செல்வது மாணவர்களுக்கும் ஆபத்தான சூழல் உள்ளது என்றும், இந்தச் சாலையில் கல்குவாரி லாரி களை அனுமதிப்பதாக இருந்தால் அதற்கேற்றார்போல் எடையை தாங்கக் கூடிய தரமான சாலைகளை  அமைக்க வேண்டும். விதிகளுக்கு புறம்பாக அதிக எடை ஏற்றி வரும்  லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும். சேதமடைந்த சாலையை உனடடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.