tamilnadu

img

ட்ரோன் மூலம் தெளிக்கப்படும் ஆர்கானிக் அமிலம்

காஞ்சிபுரம் ஜூன் 29- ஆர்கானிக் கிருமி நாசி னியை ட்ரோன் (சிறிய ரக  பறக்கம் விமானம்) மூலம்  தெளிக்கும் முன்னோட்டம் தமிழகத்தில் முதன்முறை யாக காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. கொரோனா வைரஸ் பர வலை கட்டுப்படுத்த புதிய  முயற்சியை தனியார் அமைப்பு ஒன்று மேற்கொண் டுள்ளது. துளசி, கற்றாழை உள்ளிட்ட மூலிகை பொருட் களால் கிருமி நாசினி தயா ரிக்கப்பட்டு,  ட்ரோன் மூலம்  தெளிக்க உள்ளது. இதற்கான  முன்னோட்டம் திங்களன்று (ஜூன் 29) காஞ்சிபுரம் காவ லர் பயிற்சிப் பள்ளியில் நடை பெற்றது. 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட கிரிமிநாசினியை இந்த ட்ரோன் மூலம் ஒரு  ஹெக்டர் நிலப்பரப்பு அள வுக்கு முழுவதுமாக தெளிக்க முடியும். இயற்கை  முறையிலான இந்த கிருமி  நாசினியால் பக்க விளைவு கள் எதுவும் ஏற்படாது. தமிழகம் முழுவதும் அல்ட்ரா  ட்ரோன் மூலம்  இயற்கை கிருமி நாசினி  தொடர்ச்சியாக தெளிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், காஞ்சி புரம் சரக காவல்துறை துணை தலைவர் தேன்  மொழி, மாவட்ட கண்கா ணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, சார் ஆட்சியர் சரவணன் உள்ளிடடோர கலந்து கொண்டனர்.