tamilnadu

விமான நிலையம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை: காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம்,பிப்.21- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள பொதுமக்கள் நல்லுறவுக் கூடத்தில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.21) நடை பெற்றது.   இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பலர் பங்கேற்றுப் பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு முறை யாக வழங்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர்  பா.பொன்னையா, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 15 திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பயிர் காப்பீடு செலுத்திய விவசாயிகள் 600 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கூறுகையில்,உள்ளாகூரில் தடுப்  பணை கட்டுவதற்காக ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரை வில் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்  பட்டு பணிகள் தொடங்கும் என்றும் மாவட்ட  ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு பேசுகையில், காஞ்சிபுரம் பகுதியில் அமைய உள்ள 2-வது  விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பி னார். அப்போது அவர் இந்த விமான நிலை யம் அமைவதை வரவேற்கிறோம். ஆனால்  விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப் பில்லாமல் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். இந்த விமான நிலையத்துக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துள்ள தனியார் சொத்துக்கள், புறம்போக்கு இடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார். அப்போது அவருக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்றார். கால்நடைகளை புதுவித  நோய் தாக்குவது குறித்தும் இவர் கேள்வி எழுப்பினார். அப்போது ஆட்சியர் அது ஒரு  வகையான அம்மை நோய் அதற்கு மருந்து  இல்லை. தடுப்பூசிதான் போட வேண்டும் என்றார். இவை தவிர,  நாட்டு மாடு உற்பத்தி செய்வ தற்கான விந்தணுக்கள் ,மானிய விலையில் இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவை யான உயிர் உரங்கள்,நேரடி நெல் கொள்  முதல் நிலையங்களில் உள்ள முறைகேடுகள் மற்றும் ஏரி தூர்வாருதல், வரத்து வாய்க்கால்  கள் மதகுகள் சரி செய்தல், மானிய விலை யில் இடுபொருள்கள், விதைகள் வழங்கு தல், விவசாய கடன் கிடைக்க ஏற்பாடு செய்தல் தொடர்பாகவும் பலர் கோரிக்கை வைத்தனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, இணை இயக்கு நர் (வேளாண்மை) அசோகன், செயற்பொறி யாளர் (பொதுப் பணித்துறை நீர்வள ஆதா ரம்) தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) அ.சுகு மார் உள்பட பலர் பங்கேற்றனர்.