tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்,நவ. 1 காஞ்சிபுரம் மாவட்டத் தில் பெய்த பலத்த மழை கார ணமாக கரூர் ஏரி, வையாவூர்,  மதுரமங்கலம் ஏரி உள் ளிட்ட 28 ஏரிகள் அதன் முழு  கொள்ளளவை எட்டி யுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்  தில் பொதுப்பணித்துறை யின் கட்டுப்பாட்டில் 909 ஏரி கள் உள்ளன. பலத்த மழை காரணமாக 28 ஏரிகள் அதன்  முழு கொள்ளளவை எட்டி யுள்ளன. கரூர் ஏரி, வையா வூர், மதுரமங்கலம் ஏரி, பழைய சீவரம், வல்லம் சித்தேரி உள்ளிட்ட 28 ஏரி கள் 100 சதவீதம் முழு  கொள்ளளவை எட்டி யிருக்கின்றன. இவைத் தவிர 42 ஏரிகள் 80 சதவீதமும், 103 ஏரிகள் 70 சதவீதமும், 385 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு நல்ல மழை  பெய்து வருகிறது. இதனால்  ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்  பட்ட பாதிப்புகளை அனுபவ மாகக் கொண்டு அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 84, உடனடி பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 117 கண்டறி யப்பட்டுள்ளன. மிதமான பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் 183, குறைந்த பாதிப்பு ஏற்படுத்தும் இடங்  கள் 131 என மொத்தம் 515 இடங்கள் கணக்கிடப் பட்டுள்ளன. இந்த பகுதிகள் பாதிப்பு அடையாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.