tamilnadu

காஞ்சிபுரம், செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் இருவர் பலி
காஞ்சிபுரம், டிச.12-  காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ஜெகன், சந்தோஷ். நண்பர்களான இருவரும் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த னர். இந்நிலையில் புதனன்று (டிச.11) இரவு இருவரும் காஞ்சிபுரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தனர். நத்தப்பேட்டை கூட்டுச் சாலை அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கிழே விழுந்தனர். அப்போது எதிர்திசையில் வந்த லாரி ஒன்று இவர்கள் மீது ஏறியதில் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவர் உடலையும் கைப்பற்றிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ‘சாலை குண்டும் குழியுமாக இருந்த தால் தான் அவர்கள் நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதனால் தான் விபத்து ஏற்பட்டு ள்ளது’ என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வழிபறியில் ஈடுபட்ட போலி நிருபர்கள் கைது
செங்கல்பட்டு, டிச. 12- சேலம் ஆட்டையாம் பட்டியைச் சேர்ந்தவர் உதய்சங்கர். இவர் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார். லாரி, சிங்கப்பெருமாள் கோவில் அருகே பழுதாகி நின்றது. இதனைத் தொடர்ந்து லாரியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு காரில் வந்த 3 பேர் ‘நாங்கள் நிரு பர்கள். நீங்கள் டயர் திருடி விற்பதாக புகார் வந்துள்ளது’ எனக் கூறி புகைப்படம் எடுத்தி ருக்கிறார்கள். பிறகு இதை நாங்கள் பத்திரிக்கையில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என அவர்களிடம் மிரட்டி யுள்ளனர். இதற்கு லாரி ஓட்டு நர் பணம் தர மறுத்துள்ளார். பின்னர் மூவரும் லாரி ஓட்டு நரைத் தாக்கி, அவரிட மிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துள்ள னர்.லாரி ஒட்டுநர் இது குறித்து ரோந்து காவலர்களி டம் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவ லரையும் அந்த மூன்றுபேர் தாக்கியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் காவல்துறையினர் போதை யில் இருந்த 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை செய்த தில், சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த தர்காஸ் பகுதியைச் சேர்ந்த கோமளபதி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகு தியை சேர்ந்த அந்தோணி, குன்னவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் போலியாக ‘மக்கள் கர்ஜனை’ என்ற பெயரில் வைத்திருந்த அடையாள அடடை, கார், பணம் ஆகியவற்றை காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர்.  பின்னர் 3 பேரையும் கைது செய்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.