tamilnadu

காவலர் தற்கொலை

மாமல்லபுரம்,மார்ச் 2- மதுராந்தகம் அடுத்த தேவாதூர் கிராமம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர் திருக்க ழுக்குன்றம் காவல் நிலை யத்தில் தலைமை காவல ராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஞாயி றன்று (மார்ச் 1) இரவுப் பணி முடிந்து அவர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் சேகர் வீட்டில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவருக்கு விஜயா என்ற மனைவியும் சாமிளா, சீலா என்ற மகள்க ளும், மணிபாரதி என்ற ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மதுராந்த கம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.