மதுராந்தகம், அக்.10- கோவில்பட்டியிலிருந்து பீகாருக்கு லாரி ஒன்று தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் வந்தபோது, அருகே சென்ற லாரி மீது உரசியதில் திடீரென தீப்பெட்டி ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது.இதைக் கண்ட லாரி ஓட்டுநர் உடனே லாரியை சாலையில் நிறுத்திவிட்டு கிழே இறங்கிய தால் அவர் உயிர் தப்பினார். இது பற்றி தகவல் அறிந்த மதுராந்தகம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரி முழுமையாக எரிந்து நாசமாகியது. இந்த விபத்தால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.