ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிடக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெ.லெனின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சா.முகம்மது உசேன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் தென்னரசு, முன்னாள் மாநில பொருளாளர் எம்.தங்கராஜ், மாவட்ட பொருளாளர் எம்.என்.ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர்.
****************
முன்னாள் மாநிலத் தலைவர் மு. சுப்பிரமணியன் பணி நாளான்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி வெள்ளியன்று (அக்.11) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் திவ்யா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் வாசுகி, மாவட்ட செயலாளர் இ.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.