tamilnadu

img

பணி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக  சோமிக் இஸட்எப் தனியார் நிறுவனத்தில் 20 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும்,அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் சிஐடியு  சார்பில் திங்களன்று  (மார்ச் 16) சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கப்பாரோ இந்தியா தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் டி.துரைசாமி தலைமை வகித்தார்.சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் பேசினர்.