tamilnadu

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 125 நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

காஞ்சிபுரம், மே 3-காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி விடுமுறை அளிக் காத 125 நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தொழிலாளர் தினமான மே-1ஆம் தேதி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிலையங்கள், மோட்டார் போக்குவரத்துக் கழகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அன்றைய தினத்தில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் உரிய முன்னறிவிப்பு வழங்கப் பட்டுள்ளனவா என்பது குறித்தும் தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.காஞ்சிபுரம், பரங்கிமலை, செங்கல் பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வில், விடுமுறை அளிக்காத 29 உணவு நிறுவனங்கள், 86 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட 125 நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.