தரமான கோறா வழங்க வலியுறுத்தியும் ஜரிகை மற்றும் பாவு தடையின்றி வழங்கக்கோரியும் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு தலைமை அலுவலகம் அருகே காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டு கூட்டுறவு சங்க இயக்குநர் சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கைத்தறி நெசவாளர் சம்மேளன பொதுச்செயலாளர் முத்துக்குமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். மாவட்டச் செயலர் கே.ஜீவா, மாவட்டதலைவர் ஜி.லட்சுமிபதி, துணைத் தலைவர் எம் .சுப்பிரமணி, வி.பி.சிந்தன் பட்டுக் கூட்டுறவு சங்கத் தலைவர் இ.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.