tamilnadu

அன்புமணி மீது வழக்கு பதிவு: காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம், ஏப். 6-பிரச்சாரத்தின்போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் பேசியதாக புகார் எழுந்ததால், அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய் யும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றியபோது, “வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வேண்டும். திமுக கூட்டணி கட்சியினரை வாக்குச்சாவடிக்குள் நுழையவிடக் கூடாது என்றெல்லாம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.‘இந்த பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது. திமுகவுக்கு மட்டும் கொஞ்சம் வாக்கு வங்கியுள்ளது. எனவே இங்குள்ள வாக்குச்சாவடிகளில் நாம் மட்டும்தான் இருப்போம். நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நமது வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என அன்புமணி பேசினார்.இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக் கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

;