tamilnadu

img

குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்க ஆட்சியரிடம் அரசு ஊழியர்கள் முறையீடு

காஞ்சிபுரம், ஜூலை 30- பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும், அரசு  ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீதான குற்றக் குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் ஜாக்டோ -  ஜியோ அமைப்பினர் மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூ யிஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  ஆஞ்சலோ இருதயராஜ் ஆகியேரிடம் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் அனுகுமார், தி.சேகர், முகம்மது உசேன் ஆகியோர் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவ லர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோரி டம் ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிர்வாகிகள் லெனின், குமரவேல், பாலமுருகன், நாராயண சாமி, தேவராஜன் ஆகியோர் மனு அளித்த னர். அந்த மனுவில், பணி ஓய்வு நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ முன்னணி ஊழி யர்களின் மீதான நடவடிக்கைகளை ரத்து  செய்ய வேண்டும், உயர்மட்ட குழு உறுப்பி னர்கள் பேட்ரிக் ரெய்மாண்ட், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள குற்ற குறிப்பானையை ரத்து செய்ய வேண்டும், தமிழக முதல்வர் ஜாக்டோ-ஜியோ நிர்வாகி களை அழைத்து பேச வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டிருந்தன.

;