காஞ்சிபுரம், மே 11- 48 நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17அன்று ஊர டங்கு முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வு களை அறிவித்தது. அதன்படி, பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 50 சதவீத தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க சில வழிகாட்டுதல்களோடு உத்தரவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத் தில் இயங்க கூடிய 572 தொழிற்சாலைகளில் பணி புரியும் 2 லட்சத்து 18 ஆயி ரத்து 741 தொழிலாளர்களில் 92 ஆயிரத்து 230 தொழி லாளர்களுக்கு பணி அனுமதி வழங்கபட்டுள்ளது. அரசு 50 சதவீத தொழிலாளர்களுடன் இயக்க அனுமதித்தாலும் 42 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு சென்றுள்ள தாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இருங்காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமான ஹூண்டாய் மொபிஸ் நிறு வனம் தனது 2 ஆயிரத்து 200 தொழிலாளர்களில் 600 (30 சதவீதம்) தொழிலாளர்க ளைக் கொண்டு இயங்கி யது.