tamilnadu

பிள்ளையார்பாளையத்தில் 14 நாட்கள் முழு முடக்கம்

காஞ்சிபுரம், ஜூலை 13- காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் வேகமாக  பரவும் கொரோனா வைரஸ் தடுக்க 14 நாட்கள்  அப்பகுதியை  முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வேக மாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 12 வரை  3 ஆயிரத்து 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குபட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்டுள்ளனர். அப்பகுதியிலுள்ள 5 வார்டுகளில் உள்ள 21 தெருக்கள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுமக்கள், பணி யாளர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய  தேவைகள் அனைத்தும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்பகுதிகளில் மேற்கொள்ளபட்ட பணிகளை மாவட்ட  வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சார் ஆட்சியர் சரவ ணன், பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் பார்வையிட்டனர்.