திருக்கோவிலூர். ஜூன் 18- நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கி வரும் சின்னசேலம் கூட்டு குடி நீர் திட்டத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக திருக்கோவிலூர் அருகே புதிதாக திறக்கப் பட்ட மணல் குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வரைக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணையாற்றில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல்குவாரி அமைத்து பல்வேறு இடங்களில் மணல் அள்ளுகிறது. இதனால் ஆறு கட்டாந் தரை போல் காட்சியளிக்கிறது. ஆற்றோர கிராமங்களில் குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. ஆற்றை பாதுகாக்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்கள் தொடர் போராட்டங் கள் நடத்தின. இதன் விளைவாக பல இடங்க ளில் மணல் குவாரிகள் மூடப்பட்டன. தற்போது, கொரோனா தொற்று காரண மாக பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் திருக்கோவிலூர் அருகே உள்ள டி.புதுப் பாளையம் அருகே புதிதாக மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் தேதி முதல் லாரிகளில் மணல் எடுத்துச் செல்கின்றன. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள், அரசி யல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் 144 தடை உத்த ரவை காரணம் காட்டி மிரட்டி வருகின்றனர். கூட்டுக் குடிநீர் திட்டம் முடக்கப்பட்டு குடி நீருக்கு அலையும் நிலை ஏற்படும் என்பதால் மணல் குவாரியை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.