tamilnadu

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 2 பரிசோதனை ஆய்வகம் வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி. மே, 11 - கொரானா தொற்று பாதிக்கப்பட்டோரை கண்டறிந்திட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பரிசோதனை ஆய்வ கங்கள ஏற்படுத்திட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது, இதுகுறித்து கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வர்களை அழைத்து வருவது, தனிமைப்ப டுத்தி வைப்பது, பரிசோதனை செய்வது, தொற்று உள்ளவர்களை உரிய மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புவது உள்ளிட்ட பணி களை வேகப்படுத்த வேண்டும். நோய்த்  தொற்று சோதனைக்கு உள்ளாக்குபவர்களை கனிவான முறையில் நடத்த வேண்டும்.  பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே சான்றிதழ் வழங்கி காய்கறி வியா பாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஊராட்சி  அளவில் உள்ளாட்சி, வருவாய், சுகாதாரம்  ஆகிய துறைகள் சார்பில் ஊழியர்களை ஒருங்கிணைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும். இவர்களுக்கு உதவி யாக உள்ளூர் மட்டத்தில் தன்னார்வலர்களை கொண்ட சமூக பாதுகாப்பு குழுக்கள் அமைத்து செயலாற்ற வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய  வேண்டும். அந்தப்பகுதிகளில் தினசரி  கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட தடுப்பு  பணிகளை செய்ய வேண்டும். வாசுதேவ னூர், ஜி.அரியூர், ஏ.குமாரமங்கலம், சேந்த மங்கலம் ஆகிய இடங்களில் உள்ள தனி மைப்படுத்தும் மையங்களில் உள்ளவர்க ளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். குடும்ப அட்டை இல்லாத அனை வருக்கும் ஆதார் எண் அடிப்படையில் நிவார ணப் பொருட்களை வழங்க வேண்டும். நிவா ரணம் கிடைக்காத அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்குள் வராத  கிராமங்களில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். கூலி  பாக்கி முழுவதையும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.