tamilnadu

நுண்நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக சங்கராபுரம் காவல்துறை தலைமை இயக்குனரிடம் சிபிஎம் புகார்

கள்ளக்குறிச்சி, ஆக. 30- மனுகொடுக்க சென்ற மாதர், வாலிபர் சங்க  நிர்வாகிகளை இழிவுபடுத்தி, கைது செய்த சங்கராபுரம் காவல் துறையினர் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை மின்னஞ்சல் மூலம் காவல் துறை  தலைமை இயக்குநருக்கு மனு அனுப்பி யுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 51 வகையான நுண்நிதி நிறுவனங்கள் கொரோனா பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களிடம் கட்டாயப்படுத்தி தவணைத் தொகையை வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து கடந்த மாதம்  29ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் நுண்நிதி நிறுவனங்களால் பாதிக்கப் பட்டவர்களை திரட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர்களிடம் மனு அளித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி சங்கரா புரம் வருவாய் வட்டாட்சியரிடம் பாதிக்கப் பட்டவர்களுடன் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை, மாதர் சங்க நிர்வாகி கள் உ.அம்பிகா, இ.மீனா ஆகியோர் அமைதி யான முறையில் மனு அளிக்கச் சென்றனர்.  

அப்போது அங்கு வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் வி.ரவிச்சந்திரன், சிறப்பு  உதவி ஆய்வாளர் சவுகத்அலி ஆகியோர் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி “கூட்டம் கூட்டி சத்தம் போட்டால் அடித்து உதைத்து, வழக்கு போட்டு ரிமாண்ட் செய்வேன், மாஸ்க்  போட வக்கில்லாத உங்களுக்கு போராட்டம்  எதுக்குடா, வேலை வெட்டி இல்லாமல் வாரத்துக்கு 3 போராட்டம் நடத்தி மக்களை  ஏமாற்றி கூத்தடிக்கிறீங்க” எனத் தரக்குறை வாக பேசியுள்ளார்.  பொதுமக்கள் மத்தியில் இந்த அமைப்பு களின் நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையிலும், அவர்கள் சார்ந்துள்ள அமைப்பு களை இழிவுபடுத்தியும் மிரட்டல் விடுத்துள்ள னர். இத்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வலுக்கட்டாயமாக கைது செய்து இரவு 7.30 மணிக்கு விடு வித்துள்ளனர். சங்கராபுரம் பகுதியில் செயல்படும் நுண்நிதி நிறுவனங்களை நடத்தும் நபர்களுடன் காவல் துறையின ருக்கு இருக்கும் உறவின் அடிப்படையி லேயே மேற்கண்ட சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் செயல்படும் பொறுப்புள்ள அமைப்புகளை சேர்ந்த மாதர்  மற்றும் வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி களை கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடு பட்டவர்களைபோல் காவல் துறையினர் நடத்திய விதம் கண்டிக்கதக்கதாகும். இது குறித்து முறையான விசாரணை நடத்தி மேற்கண்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கு மாறு கட்சியின் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.