tamilnadu

img

ரத்ததான முகாம்: வாலிபர் சங்கத்திற்கு நீதிபதி பாராட்டு

கள்ளக்குறிச்சி. நவ. 2- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் 40ஆம் ஆண்டு  அமைப்பு தினத்தை முன்னிட்  டும், படுகொலை செய்யப்  பட்ட அசோக் நினைவாக வும் ரத்ததான முகாம் கள்ளக்  குறிச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி தலைமையில் சனிக்கிழமை (நவ. 2) நடை பெற்றது. ரத்ததான முகாமை கள்ளக்குறிச்சி விரைவு நீதி மன்ற நீதிபதி ஆர்.லதா  துவக்கிவைத்து பேசுகை யில், “இளைஞர்களின் வீர  அடையாளமாக பகத்சிங் கின் வழியில் செயல்படும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்ததானம் செய்வது பாராட்டுக்குரியது. உயர் சாதியினருக்கு மட்டும்  ரத்ததானம் வழங்கும் நிலையை மாற்றி, சாதியத் திற்கு அப்பாற்பட்டு தேவைப் படும் அனைவருக்கும் ரத்  தம் கிடைக்கக்கடிய வகை யில் வாலிபர் சங்கத்தினர் செயல்படுவது சிறப்புக்குரி யது” என்றார். இதில் ரத்ததான கழக  அமைப்பாளர் வி.மார்த் தாண்டன், கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ஜி.பிர காஷ்வேல், மருத்துவர்கள் வி.உதயகுமார், டி.ரவிச் சந்திரன், நேரு, கே.பழ மலை, எம்.மனோபாலா, திமுக நகரச் செயலாளர் ஆர். சுப்புராயன், சிபிஎம் வட்டச் செயலாளர் பி.மணி, வழக் கறிஞர் வி.ராஜா, தமுஎகச மாவட்டத் தலைவர் கு. சுதா, வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் வி.ஏழுமலை, பொருளாளர் ஆர்.பூமாலை  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது.