கள்ளக்குறிச்சி, ஜூன் 20- தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் போல கள்ளக்குறிச்சி நகரத்திலும் காவல்துறை துணையோடு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி மாணவிகளையும் பெண்களையும் மிரட்டி பாலியல் வன்கொடுமைகள் நடந் துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிரா பாளையம் செல்லும் வழியில் உள்ள குள்ள கருப்பன் கோயில், அதன் அருகிலுள்ள இடத்தில் இப்படிப்பட்ட பாலியல் வன் கொடுமைகள் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. பள்ளி மாணவிகளை யும் சில பெண்களையும் ஆசைவார்த்தை கள் கூறி தொடர்ந்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமைகளையும் செய்து அதனை உடன் இருப்பவர் மூலம் வீடியோவாக எடுத்து தொடர்ந்து அதனை பயன்படுத்தி அவர்களை மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தல்க ளும் மற்றும் வேறுபல நபர்க ளுக்கும் அனுப்பி பாலியல் வன் கொடுமைகள் செய்துள்ளதாக தெரியவருகிறது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா(45) என்பவரும் அவரு டைய கூட்டாளியான வேலுமணி யும்(24) இக்கொடிய சம்பவங்க ளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நீண்ட நாட்க ளாக நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியில் புரோக்கராக அப்பகுதி யைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி இவர்களுடைய கொடுமைகளை தாங்க முடியாமல் தாய், தந்தையரிடம் கூறியதன் மூலம் அவர்கள் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திற்கு வந்து ஜூன் 17ஆம் தேதி திங்களன்று புகார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னணியில் காவல்துறையினர் செவ்வாயன்று மேற்படி ராஜா வையும், வேலுமணியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் காவல்துறையின் துணையோடு தான் நீண்டகாலமாக இப்பாத கச்செயல் இப்பகுதியில் நடை பெற்றுள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். உள்ளூர் காவலர்கள் ராஜா விடம் பணம் பெற்றுக்கொண்டு இதன் மீது போதிய கவனம் செலுத்தாமல் அலட்சி யப்படுத்தி வந்துள்ளனர். காவல்துறை யின் துணை இருப்பதால்தான் குற்ற வாளிகளில் ஒரு தரப்பினர் கைது செய்யப் பட்டு மூன்று நாட் களாகியும் இச்சம்பவங்களைப் பற்றி பத்திரிகை யாளர்களிடமும் மற்றவர்களிட மும் தகவல் தெரிவிக்காமல் காவல்துறை யினர் ரகசியம் காத்து வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கும் தனிப்பிரிவு காவலர்க ளும் இது தொடர்பாக விசாரித்ததாக ஏதும் தெரியவில்லை. அப்படியா? யார் அந்த ராஜா? என்று கேட்கின்றனர். உள்ளூர் அரசியல் புள்ளிகள் மற்றும் காவல்துறை யினர் உள்ளிட்டோரின் துணையோடு பல மாணவிகளும், பெண்களும் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே இச்சம்பவத்தைப் பற்றி உரிய முறையில் நேர்மையான விசாரணையை உயர்மட்ட காவல்துறையினர் விசாரித்தால் பல்வேறு அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரும். உயர் அலுவலர்கள் தலையிட்டு பாலியல் வன்கொடுமை சம்ப வங்களில் நடைபெற்றுள்ள உண்மைகள் முழுவதையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறு கின்றனர். மேலும் இச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என கூறுகின்றனர். -ந.நி.