உளுந்தூர்பேட்டை, ஜூன் 20- உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் மகப்பேறுக்கு சேர்க்கப்படும் பெண்களின் குடும்பத்தினரிடம் கையூட்டு கேட்டு கட்டாயப்படுத்துவதை தடுக்கக் கோரி சனிக்கிழமையன்று (ஜுன் 20) தலைமை மருத்துவரை நேரில் சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உளுந்தூர்பேட்டை நகரக்குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால் 1,500 ரூபாயும், பெண் குழந்தை என்றால் 1,000 ரூபாயும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்களி டம் கையூட்டு கேட்டு ஊழியர்கள் சிலர் கட்டா யப்படுத்தி வருவதை தடுக்க வேண்டும், மருத்துவமனை வார்டுகளிலும் செயல்படாத மின்விசிறி, மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும், ரத்த வங்கிக்கு படுக்கை களை அதிகப்படுத்தி தனி வார்டு அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, மாநிலக்குழு உறுப்பினர் செல்வ ராசு, உளுந்தூர்பேட்டை ஒன்றிய செய லாளர் வி.மார்த்தாண்டன், நகரச் செயலாளர் இ.சதீஷ்குமார், நகரத் தலைவர் ராமராஜன், வெ.காரல் மார்க்ஸ், ஜெ.டார்வின் உள்ளிட்டோர் மனு அளித்த னர். அதனைப் பெற்றுக் கொண்ட தலைமை மருத்துவர் நளினிபோஸ் உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.