ஏழை, நடுத்தர மக்கள் வங்கியில் கடன் பெறப் பிணையாக சொத்து எதையாவது காட்ட வேண்டும் என வங்கி மேலாளர்கள் கேட்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த பிணை களுடன் பலாப்பழம், முந்திரி, பஜ்ஜி, போண்டா, மட்டன், சிக்கன், நாட்டுமீன், பேப்பர் கட்டு, பேனா என கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்களிடம் பல்லி ளித்தும், அதிகார போதையிலும் கேட்கும் வங்கி மேலாளர்களைப் பார்த்தி ருப்பீர்களா? கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்த நாட்டில் அமைந்துள்ள இந்தியன் வங்கி யின் மேலாளர் அஜய்தயாளனும், உதவி மேலாளர் பரத் பத்மநாபனும் சேர்ந்து அடிக்கும் கூத்துக்கள் தனியார் நுண் நிதி கடன் நிறுவனங்களின் அடாவடியை விடக் கூடுதலாக உள்ளது. இந்த வங்கியைச் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களி லிருந்து 8,000க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் உள்ளனர். 5 பேர் பணிபுரியும் இங்கு மாரியம்மாள் என்ற ஆதரவற்ற பெண் ஒருவர் துப்புரவுத் தொழிலாளி யாகத் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கிறார்.
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்க ளைத் தரக்குறைவாகப் பேசுவது, கிராமப்புறப் பெண்களிடம் குளித்துவிட்டு வந்தாயா, ஏன் தலை கலைந்துள்ளது என்றெல்லாம் மேலாளரும், துணை மேலாளரும் இரட்டை அர்த்தத்தில் பேசு வது வழக்கம் என்கின்றனர். உள்ளூரில் உள்ள சில அரசியல் பிரமுகர்களை அனு சரித்துக் கொண்டு சொந்த நிதி நிறு வனம்போல் பொதுத்துறை வங்கியை நடத்தி வருகின்றனர். படித்த இளைஞர்கள் தாட்கோ மூலம் கடன் கேட்டு அணுகினால் “மாடு வாங்கி வளர்க்க வேண்டியது தானே, உங்களுக்குக் கடன் தர முடியாது, இந்த ஆண்டு கொடுத்து முடித்து விட்டோம்” என்றெல்லாம் கூறி அலைக்கழிப்பது இருவரின் வழக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அந்த பகுதியின் சிறப்பு உணவுப் பொருட்களைத் தினசரி வாடிக்கையாளர் களை ஓசியில் கொண்டு வரச்சொல்லி வங்கிக்குள்ளேயே சமைத்துச் சாப்பிடு வதை வழக்கமாக வைத்துள்ளனர். திருமணம் ஆகாத துணை மேலாளர் தினசரி மாலையில் கடைவீதியைச் சுற்றி வருவதும், வங்கியில் லட்சக்கணக்கில் வைப்புத்தொகை செய்திருக்கும் நபர்க ளின் வீடுகளுக்குச் சென்று வட்டிக்குக் கடன் வாங்குவதும் இவருடைய வாடிக்கை எனப் பலரும் கூறுகின்றனர்.
தற்போது வரை 15 லட்ச ரூபாய் அளவிற்கு இப்பகுதியில் இவர் கடன் வாங்கியுள்ளாராம். வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட் பிரிண்ட் கேட்பவர்களிடம் ஏ 4 பேப்பர் கட்டு வாங்கி வரச் சொல் வது அல்லது ஆயிரக்கணக்கில் பணம் கேட் பது இவர்களின் வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. ஜெயக்குமார் கூறியதாவது: விவசாயிகளுக்கு வேளாண் கடன் கொடுப்பதில்லை. படித்த இளைஞர்க ளுக்கு கல்விக் கடன் வழங்கியிருந்தால், அவர்களின் வீடுகளுக்குச் சென்று பணம் செலுத்தச் சொல்லி ஆபாசமாகப் பேசுவது, முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுப்பது என வங்கியின் மேலாளரும், துணை மேலா ளரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கிக்கு 300 கோடி ரூபாய் வைப்பு இலக்கு நிர்ணயித்து இருந்தாலும் 160 கோடிதான் இவர்களின் வைப்புத் தொகையாக உள்ளது.
அதுவும் பொதுத் துறை வங்கியில் ஜீரோ கணக்கு மற்றும் 500 ரூபாய் இருப்பு உள்ள கணக்கு களைக்கூட 1,000 ரூபாய் இருப்பு இருக்க வேண்டும் என இவர்கள் வாடிக்கையாளர்க ளிடம் பிடித்தம் செய்வதால் இந்த வைப்புத்தொகை உள்ளது. 100 நாள் வேலை பணம் வந்தால்கூட கடனுக்கு அதனை வரவு வைத்துக் கொள்வது, கிராமப்புறப் பெண்களிடம் முறை இல்லாமல் பேசுவது என இவர்கள் இரு வரின் அடாவடி அத்துமீறி செல்கிறது. எனவே உடனடியாக வங்கியின் கடலூர் மண்டல நிர்வாகம் மற்றும் துறை உயர் அதிகாரிகள் உரிய வகையில் விசா ரணை நடத்தி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி விவசாயி களுக்கும், சிறு கடை உரிமையாளர்க ளுக்கும், முந்திரி உள்ளிட்ட சிறு தொழில் செய்வோருக்கும் கடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சியின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார். -வி.சாமிநாதன்