tamilnadu

img

ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் உண்டியல் வசூல்: அள்ளி தந்த மக்கள்

கள்ளக்குறிச்சி. டிச, 31-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்  டம் முழுவதும் நடைபெற்று வரும் வெகுஜன நிதி வசூலின் ஒரு பகுதி யாக திருக்கோவிலூர் அருகேயுள்ள செட்டித்தாங்கல் கிராமத்தில் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உண்டியல் ஏந்தி நிதி வசூலித்தார். கிராமப்புற ஏழை, எளிய மக்களி டம் ஒவ்வொரு ஆண்டும் நடை பெறும் வெகுஜன நிதி வசூல் இயக் கம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு நாள் அன்று துவங்கியது. கடந்த ஆறு தினங்க ளில் ரூபாய் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட  தொகையை பொதுமக்கள் வீடு,  வீடாகச் சென்று நிதி கேட்ட தோழர்களி டம் அள்ளிக் கொடுத்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் நடைபெறும் நிதி வசூல் இயக்  கம் என்பது திட்டமிட்ட தினங்க ளுக்கு முன்பாகவே கட்சி அணி களின் பெரும் உற்சாகத்துடன் கிராமப்புறங்களில் துவக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களும், குடிசை களும் நிறைந்துள்ள மாவட்டமான இங்கு பல்வேறு சொந்த சிரமங்கள் இருந்தாலும் நமக்காக குரல் கொடுக்கும் போராளிகள் இவர்கள் என இன்முகத்துடன் வரவேற்று தங்களால் இயன்ற நிதியினை பொதுமக்கள் அள்ளித் தந்தனர். பெரும்பாலான கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக வெளிமாநி லம் மற்றும் நகர்புறங்களுக்கு என  இடம் பெயர்ந்து செல்லும் உழைப் பாளி மக்களின் ஒரு பிரிவினர் ஊரில் இல்லாத நிலையில்கூட வீடுகளில் இருக்கும் பெண்கள் கூடுதலான தொகை தர முடியவில்லையே என்ற வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டே இயன்ற நிதியை கொடுத்தனர். அடுத்த முறை கூடுத லான நிதி தருவதாக வாக்குறுதியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. கட்சியின் சார்பில் கடந்த ஆண்டு 100 நாள் வேலை, சட்டக்கூலி தரக் கோரியும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படவேண்டும், புதிய  தொழிற்சாலைகள் துவங்க வேண்  டும், ஆறுகளின் குறுக்கே தடுப்ப ணைகள் கட்டி நீர் ஆதாரத்தை  மேம்படுத்த வேண்டும், விவசாயி களின் நெல், கரும்பு உள்ளிட்ட  விலை பொருட்களுக்கு கட்டுப்படி யான விலை தர வேண்டும் என்பவை  உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டது.  இதனை நினைவுகூர்ந்து பொது மக்கள் நிதி அளிக்கின்றனர். அந்த  வகையில் ஜனவரி 20ஆம் தேதி வரை  ஒவ்வொரு சனி, ஞாயிறு அன்றும் நிதி  வசூல் இயக்கம் மாவட்டம் முழு வதும் நடைபெறுகிறது. என் நிதி வசூல் இயக்கத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்  தன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் குழுக்களுக்கு தலைமை ஏற்று செல்கின்றனர். உழைப்பாளி மக்களுக்காக போராடும் இயக்கங் களை அம்மக்கள் என்றும் கைவிடுவ தில்லை என்பது இந்த இயக்கத்திற்கு  மக்கள் அளிக்கும் ஆதரவு மூலம் வெளியாகி வருகிறது.

;