கள்ளக்குறிச்சி, மார்ச் 12- கல்வராயன்மலை வெள்ளி மலை பகுதியில் பல தலைமுறை களாக மலைவாழ் மக்கள் உழுது அனு பவித்து வரும் நிலங்களை காப்புக் காடாக மாற்றும் உத்தரவை ரத்து செய்திடக் கோரி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வராயன் மலையில் 75க்கும் மேற்பட்ட கிரா மங்களிலிருந்து மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்கள் ஆயிரக்கணக் கான ஏக்கர் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை காப்புக்காடு களாக மாற்ற 7.3.2019 ஆம் தேதியன்று மாவட்ட அரசிதழ் வெளியீட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 75 கிராமங்களில் 3 ஆயிரத்து 546 குடும்பத்தினர் மலைவாழ் மலை யாளி இனபழங்குடி மக்கள் ஆவர். காப்புக் காடுகளாக மாற்றுவ தற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயி ரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். பிறகு கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலர் அவர்களிடத்தில் நேரில் மனு அளித்துள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் இதனை பரிசீலிப்பதாகவும், இது குறித்து முழு விசாரணை நடத்தப் படும் என்றும் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக எந்தவித விசாரணை யும் நடத்தப்படவில்லை என தெரி கிறது. எனவே ஒட்டு மொத்தமாக 1267.70 ஹெக்டேர் நிலப்பரப்பினை காப்புக்காடாக மாற்றுவதை உடனடி யாக நிறுத்த வேண்டும். பழங்குடி மலையாளி இன மக்களின் அனுப வத்தில் உள்ள நிலங்களை உரிய நபர்களுக்கு நிலப்பட்டா வழங்கிட வேண்டும். மேலும் 2006 வன உரிமைச் சட்டத்தின்படி ஏற்கனவே பல ஆயிரக் கணக்கான மனுக்கள் அனுபவ நிலங்களுக்கு பட்டா கோரி தங்களது அலுவலகத்தில் நேரில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை சுமார் 500 குடும்பத்தின ருக்கு மட்டுமே நிலப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 3000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மனுக்கள் மீது முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே இந்த மனுவுடன் இணைத்துள்ள கிராமங்களின் விபரப்படி 2006 வன உரிமைச் சட்டத்தினடிப்படையில் மனுக்களை விசாரணை செய்து நிலப்பட்டா வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். மேலும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடமும் இது தொடர்பான மனுக்களை சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு அளித்தார். அவர் நிலப் பட்டா கோரி 8 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், இதில் 3 ஆயிரம் மனுக்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 600 நிலப் பட்டாக்களை வழங்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, வட்டச் செயலாளர் பி.மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்க மாநிலப் பொருளாளர் வி.ஏழு மலை, கல்வராயன்மலை சங்கத் தலைவர் வி.அண்ணாமலை, செய லாளர் ஆர்.செல்வராசு, சடையன், ராமன் ஆகியோர் உடன் இருந்த னர்.