கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்தில் கள உதவியாளர் பதவியில் இருந்து கம்பியாளர் மற்றும் வணிக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் 19ஆம் தேதிக்குள் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து முற்றுகைப் போராடம் கைவிடப்பட்டது. இதில் தலைவர் கே.விஜயகுமார், செயலாளர் கே.சீனிவாசன், பொருளாளர் எஸ்.வெங்கடேசன், நிர்வாகிகள் இ.காமராஜ், சலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.