tamilnadu

img

கள்ள்ச்சாராய எதிரொலி - கள்ளக்குறிச்சி ஆட்சியர் பணியிட மாற்றம்

கள்ளச்சாராய எதிரொலியால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாரயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகார எதிரொலியால் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ். பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை தற்காலிக பணிநீக்கம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.