tamilnadu

img

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சி. ஆக. 4- தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து  புறக்கணிப்பதாகக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து விசா ரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரம் வட்டம் சவேரியார்பாளையம் ஏரிகொட்டாய் பகு தியை சேர்ந்தவர் ஜேக்கப் (36). இவர் கடந்த 2018ஆம்  ஆண்டு சவேரியார்பாளையம் பகுதியில் கிணற்று மேடு மண் அள்ளியது தொடர்பாக அதே ஊரைச்  சேர்ந்த சிலர் இவரைத் தாக்கி கொலை செய்ய  முயற்சித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் ஜேக்கப் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே பஞ்சா யத்தில் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அதை 15 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளனர்.

ஆனால் தாக்கியவர்கள் உள்ளிட்ட சிலர் 5 லட்சம் ரூபாய் அபராதம் தர வேண்டும் என ஜேக்கப்பை மிரட்டியதோடு, குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து ஜேக்கப் கூறுகையில், வீட்டின் மின்  இணைப்பை துண்டித்து, அரசு மானியத்தில் கட்டி வரும் வீட்டிற்கான கட்டுமான பொருட்கள் கிடைக்கா மல் தடை செய்துள்ளனர். மேலும் ஊருக்கு பால்  எடுத்துச் செல்லும் எனது மகள் மற்றும் குடும்பத்தி னரை மிரட்டுகின்றனர். இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றார்.   மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க ஆட்சியர்  அலுவலகத்திற்கு வந்த ஜேக்கப் திடீரென அவர் மனைவி, மகள், மகன் ஆகியோர் மீதும், தன் மீதும்  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறை யினர் அவர்களைத் தடுத்து கைது செய்தனர். பின்னர்  அறிவுரை கூறி மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கும்படி கூறினர்.