tamilnadu

img

உழைப்பைச் சுரண்டும் மது போதையை ஒழிப்போம்! விசிக மகளிர் மாநாட்டில் உ. வாசுகி பேச்சு

கள்ளக்குறிச்சி, அக். 3 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந் தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு புதனன்று (அக்டோபர் 2 ) மாலை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ். பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தவத்திரு பால. பிரஜாபதி அடிகளார், விசிக பொதுச்செய லாளர்கள் ம. சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ,  துரை. ரவிக்குமார் எம்.பி., சிபிஐ அகில இந்திய தலைவர்களில் ஒருவரான ஆனி ராஜா, மகளிர் காங்கிரசை சேர்ந்த ஆர். சுதா எம்.பி.,, விசிக துணை பொதுச்செயலாளர் எழில் கரோலின், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா ஷேக்முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மகளிர் அணித் தலைவர் ஏ.எஸ். பாத்திமா முசாபர், மனிதநேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஐ.ஜ ஷான்ராணி அலிமா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி பங்கேற்று உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மதுபோதை எரியும் பிரச்சனை

இன்றைய காலகட்டத்தில் பற்றி எரிகின்ற பிரச்சனையாக மது போதை இருக்கிறது. இதை இல்லாமல் செய்வது என்கின்ற தீர்மானத்தை விசிக தலைவர் திருமாவளவன் முன்னெடுத்து இருக்கிறார். அவரது முயற்சியாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும்.

கம்யூனிஸ்ட் இயக்கம் 100 ஆண்டு களைக் கடந்த- பல சவால்களை எதிர்கொண்டு வளர்ந்திருக்கும் பேரியக்கம். துவக்கத்தில் இருந்து பெண்களை சக போராளிகளாக, சம உரிமைகளை பெற்ற வர்களாக பார்க்கக்கூடிய இயக்கம் இடதுசாரி இயக்கம். அதனால் தான், பெண்கள் அலங்கார பதுமைகள் அல்ல, தலையாட்டி பொம்மைகளும் அல்ல, களப் போராட்டங்களில் ஆணுக்கு இணையாக சில நேரங்களில் ஆண்களை விட களத் திலே நின்று களமாடக்கூடிய போராளிகளாக திகழ்கிறார்கள்.

குடும்ப வன்முறைக்கு காரணமான மது 

காந்தியடிகள் மது போதைக்கு எதிராக மட்டுமல்லாமல் மத போதைக்கு எதிராகவும் இந்த நாட்டில் போராடி இருக்கின்றார். வன்முறைக்கு போதைப்பழக்கம் எவ்வாறு அடிப்படையாகின்றதோ அதேபோல் குடும்ப வன்முறைக்கும் போதைப்பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது. தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மது ஒழிய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும்.\

மது என்பது சிந்தனையை மழுங் கடிக்கச் செய்யும் பழக்கமாகும், போதைப் பழக்கத்திற்கு எதிரான பூரண மது ஒழிப்பு நாட்டில் நடத்தப்பட வேண்டும் ஒன்றிய அரசும், மாநில அரசும் மது ஒழிப்புக் கோரிக்கைகளை ஏற்று படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ரூ. 46 ஆயிரம் கோடி மதுவினால் கிடைத்த வரு மானமாக உள்ளது. இந்த வருமானம் அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய உழைப்பைச் சுரண்டி வந்ததாகும். இதை மாற்ற வேண்டும். 

மது ஆலைகளில் உற்பத்தியை குறைக்க வேண்டும்

மதுபான ஆலைகள் உற்பத்தியை குறைத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசு மதுபான ஆலைகளில் உற்பத்தியை முழுமையாக குறைக்க வேண்டும்.  தமி ழகத்தில் இருக்கக்கூடிய டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக ஒவ்வொன்றாக மூட வேண்டும். டாஸ்மாக் பார்களில் குடிப் போர்களுடைய நேரத்தை குறைத்து அவர் களுக்கு செய்து கொடுக்கும் வசதிகளை குறைத்து பார்களை  மூட வேண்டும். 

அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டு போடுவதற்கு மது வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இனி நடக்காது என உத்தரவாதம் தர வேண்டும், அரசியல் கட்சிகள் மதுவுக்கு எதிரான உறு தியான உறுதிமொழி எடுத்தால் மட்டுமே மது வை நாட்டில் இருந்து ஒழிக்க முடியும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போதை யில்லாத தமிழகம், போதையில்லாத இந்தியா உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. 

இவ்வாறு உ. வாசுகி பேசினார்.