tamilnadu

img

அதிமுக எம்எல்ஏ சாதி மறுப்பு திருமணம்..

கள்ளக்குறிச்சி:
அதிமுக எம்எல்ஏ பிரபுவும், கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் எளிய முறையில் பெற்றோர் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா பொது ஊரடங்கால் மக்கள் அதிகமாகக் கூடும் கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பிரமாண்டமான முறையில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்த சிலரும் தங்களது திருமணத்தை எளிமையான முறையில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி வருகின்றனர்.

இந்த கொரோனா காலத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத் தக்கது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு தனது காதலி சௌந்தர்யாவை திருமணம் செய்துகொண்டார்.அக்டோபர் 5 ஆம் தேதி காலை 5. 40 மணிக்கு தியாகதுருகத்தில் உள்ள பிரபுவின் இல்லத்தில் பெற்றோர் தலைமையில் எளிய முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. பெண்ணின் பெற் றோர்கள் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக எம்எல்ஏ பிரபு தெரிவித்துள்ளார். சௌந்தர்யாவும் தன்னுடைய விருப்பத்துடன் தான் இந்த திருமணம் நடைபெற்றுள் ளது என்று கூறியுள்ளார். இது சாதி மறுப்பு திருமணம் என்பதால் பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.