புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக கூடுதல் நீதிமன்றம் ஞாயிறன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் கிருஷ்ணன்ராமசாமி உள்ளிட்டோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, எஸ்.சுஜாதா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.