tamilnadu

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

கள்ளக்குறிச்சி. ஜூன் 14- கள்ளக்குறிச்சி மாவட்  டத்தில் 6 இடங்கள் நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து ஆட்சியர்  கிரண்குரலா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் 330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் மரவாநத்தம், சின்னசேலத்தில் சாஸ்திரி நகர், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை நகரின் மேற்கு கந்தசாமிபுரம், கள்ளகுறிச்சி நகரில் மேல்  அக்ரகாரத் தெரு, திருக் கோவிலூர் நகரத்தில் ஆதி லட்சுமி நகர், சங்கரா புரத்தில் எஸ்.எஸ்.மண்டபம்  பின்புறம் ஆகிய ஆறு பகுதி கள் நோய் கட்டுப்பாட்டு பகுதி களாக அறிவிக்கப்பட்டுள் ளன. இந்த பகுதிகளில் தடுப்பு கள் அமைக்கப்பட்டு தினசரி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக ஆட்சியர் தெரி வித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர் மகாராஷ்டிரா மாநி லத்தில் இருந்து தமிழகத்தின் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 250 புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மூலம்  வந்தனர். அவர்கள் அனை வரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் தொற்று வேகமாக பரவி  வரும் நிலையில் பொது மக்கள் தனிமனித இடை வெளி, முகக்கவசம் உள் ளிட்ட சுய பாதுகாப்பு நட வடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் வலி யுறுத்தியுள்ளது.