ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 200 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள்ளக்குறிச்சி வட்டக்குழு சார்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சனிக்கிழமையன்று (மே 23) வழங்கப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் அ.பா.பெரியசாமி, வட்டச் செயலாளர் பி.மணி, மற்றும் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் கடந்த வாரம் 200 ஏழை, எளிய குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.