பெங்களூரு:
கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார், பெங்களூரு விதான் சவுதாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “இன்று முதல் கர்நாடகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிஉள்ளது; காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் எடியூரப்பாவை காப்பாற்றி உள்ளனர்; இருப்பினும் எடியூரப்பா சிறு மரியாதைக்காக கூடஅவர்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை; இருக்கட்டும், ஆனால், அந்த 17 பேருக்கு கொடுத்த வாக்குறுதிகளையாவது எடியூரப்பா காப்பாற்ற வேண்டும்” என்றுகூறியுள்ளார்.
“குமாரசாமி அரசை கவிழ்க்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மும்பைக்கு சென்றனர். தற்போது அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை எடியூரப்பா கைவிட்டுவிடக்கூடாது. நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும். உங்களை (எடியூரப்பா) நம்பி வந்தவர்களுக்கு நல்ல பதவிகளை வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “17 எம்எல்ஏ-க்களைதகுதி நீக்கம் செய்த சபாநாயகரை பாஜகவினர் விமர்சனம் செய்கிறார்கள்; உண்மையில் அவர்கள் சந்தோஷப்பட வேண் டும்” என்றும் தெரிவித்துள்ள சிவகுமார், “17 பேரும் தகுதி நீக்கம்செய்யப்படாவிட்டால், அவர்கள்அமைச்சர் பதவி கேட்டு நச்சரிப்பார்கள்; அந்த தொல்லையில் இருந்து எடியூரப்பா காப்பாற்றப் பட்டு உள்ளார். இதை எடியூரப்பா உணர வேண்டும்” என்றும் வெகுவாக வாரியுள்ளார்.