கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டை பெட்டி மாட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள பகத் முன் பல்கலைக்கழக கல்லூரியில் நடக்கும் செமஸ்டர் தேர்வில், மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியை மாட்டி தேர்வு எழுத வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை மாணவர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மீண்டும் இவ்வாறு நடந்தால் கல்லூரி உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.