tamilnadu

தூக்குத் தண்டனை குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையாக குறைப்பு

சண்டிகர்:
பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பியந்த் சிங் படுகொலை  வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனையாக மத்திய அரசு குறைத்துள்ளது. சண்டிகரில் 1995 ஆம் ஆண்டு திலாவர் சிங் என்ற காவல்துறை அதிகாரி மனிதவெடி குண்டாக மாறி நடத்திய தாக்குதலில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பியந்த் சிங் உள்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னொரு மனித வெடிகுண்டாக வெடிக்க இருந்த பல்வந்த் சிங் ரஜோனா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பப்பர் கால்சா அமைப்பின்தீவிரவாதியான பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தையொட்டி, மனிதாபிமான நடவடிக்கையாக பல்வந்த் சிங்குக்கான தண்டனையை மத்திய உள்துறை அமைச்ச கம் குறைத்துள்ளது. இந்த முடிவை சண்டிகர்  நிர்வாகத்துக்கும், பஞ்சாப் அர சுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

;