இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதலில் உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கலபுர்கிக்கு திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கருதப்பட்டது.
இதையடுத்து கடந்த 5-ந் தேதி அவரகலபுர்கியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அவருடைய குடும்பத்தினர் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கலபுர்கி முதியவர் கொரோனா வைரசால் மரணம் அடைந்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில்
தற்போது முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனிமை வார்டுக்கு அனுப்பப்படுவார் ”என்று கல்பூர்கியின் துணை ஆணையர் ஷரத் பி கூறி உள்ளார்.
இதுகுறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு இன்று வெளியிட்டு உள்ள டுவிட்டில்
கர்நாடகாவில் இன்று கொரோனா பாதிப்பு மேலும் 2 ஆக அதிகரித்து உள்ளது. மொத்த உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. . இங்கிலாந்தில் இருந்து வந்த 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்து உள்ளது. கலபுர்கி இறந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ”என்று தெரிவித்துள்ளார்.