tamilnadu

img

பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்... சிஏஏ போராட்டக்காரர்களை ஒழித்துக் கட்டுவாராம்

சண்டிகர்:
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு இரண்டையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்களை ஒரு மணி நேரத்தில் அழித்தொழித்து விடுவோம் என்று பேசி ஹரியானா பாஜக எம்எல்ஏ லீலாராம்குர்ஜார் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.“இதனால் மக்களுக்கு நான் தெரிவிப்பதெல்லாம் என்னவென்றால், இன்றைய இந்தியா ஜவஹர்லால் நேருவுடையதோ, மகாத்மா காந்தியுடையதோ அல்லது மக்மோகன் இந்தியா அல்ல; மோடிஜி, அமித்ஷாஜியின் இந்தியா” என்றும் லீலாராம் குர்ஜார் குறிப்பிட்டுள்ளார்.ஹரியானா மாநிலம், கைதால் தொகுதியில் குடியுரிமை சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஆதரித்துப் பேசுகையிலேயே இவ்வாறு அவர் மிரட்டியுள்ளார். “சிஏஏ - என்ஆர்சி சட்டங்கள், இந்தியாவில் உள்ளமுஸ்லிம்களுக்கு எதிரானதல்ல; ஆனால் சட்டவிரோதமாக குடியேறி இருந்தால் அவர்கள் வெளியேறத்தான் வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.ராகுலையும், பிரியங்காவையும் பெட்ரோல் குண்டைப்போன்றவர்கள் என ஹரியானா பாஜக அமைச்சர் அனில்விஜ் கூறியிருந்த நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. லீலாராம், போராட்டக்காரர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டி விடுவோம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

;