கரூர், அக்.6- அக்.16 இடதுசாரிக் கட்சிகளின் நாடு தழுவிய கண்டன இயக்கத்திற்கு சிபிஎம் கரூர் மாவட்டக்குழு ஆதரவு தெரிவித்து ள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.கந்தசாமி, சிபிஐ மாவட்டச் செயலா ளர் எம்.ரத்தினம் மற்றும் சிபிஐ(எம்எல்), விடு தலை மாவட்டச் செயலாளர் மு.ராமச்ச ந்திரன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறி ப்பில் தெரிவித்திருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) விடுதலை ஆகிய இடதுசாரிக் கட்சி களின் ஆலோசனைக் கூட்டம் கரூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்.5 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். மாவ ட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மோ கன்குமார், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பி னர் பி.சக்திவேல், சிபிஐ(எம்எல்), விடுதலை சார்பில் மாவட்டச் செயலாளர் மு.ராமச்சந்தி ரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ம.ப.மதிய ழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரித்திட பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும். அதுவரை மத்திய அரசாங்கம் வேலை யில்லாத இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும். குறை ந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் உத்தரவாதம் செய்திட வேண்டும். வேலையிழந்த தொழி லாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சிக ளின் நாடு தழுவிய கண்டன இயக்கத்தின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் அக்டோபர் 16 அன்று காலை 10 மணிக்கு கரூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெறும். மேலும், இக்கோரிக்கைகளை விளக்கி அக்.13 அன்று சித்தலவாய், வெள்ளியணை, தரகம்பட்டி, குளித்தலையிலும், அக்.14 அன்று தோகைமலை, வேலாயுதம்பா ளையம், பள்ளபட்டியிலும், அக்.15 அன்று க.பரமத்தியிலும் மக்கள் சந்திப்பு தெரு முனைக் கூட்டம் நடத்துவது என தீர்மானி க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.