கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் ஆரியூர் கிளை சார்பில் செங்கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்சியின் கிளைச் செயலாளர் மு.சேமான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி செங்கொடியை ஏற்றி வைத்து பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினார் சி.முருகேசன், க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.வி.பழனிச்சாமி, கிளைச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.