கரூர், அக்.23- கரூர் மாவட்டத்தில் புதிய குளிர்சாதனப் பேருந்துகள் சுமார் 362. 22 லட்சம் மதிப்பிலான 10 பேருந்துகளை போக்கு வரத்து துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர் பேருந்து நிலையத்தில் நிலையத்தில் 10 புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர் மண்டலத்திற்கு 6 பேருந்துகளும், திருச்சி மண்டலத்திற்கு 3 பேருந்துகளும், காரைக்குடி மண்டலத்திற்கு 1 பேருந்து என மொத்தம் 10 குளிர்சாதன பேருந்துகள் துவக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 362. 22 லட்சம் மதிப்பாகும். கரூர் - திருப்பூர், கரூர் - திருச்சி, கரூர் - ராமேஸ்வரம், கரூர் - தஞ்சாவூர், கரூர் - கோயம்புத்தூர், திருச்சி - கோயம் புத்தூர், திருச்சி - பழனி, காரைக்குடி - திருச்சி என மொத்தம் 8 வழித்தடங்களில் பேருந்துகள் செல்கிறது. பின்னர் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதா வது, தீபாவளி பண்டிகையை சிறப்பான முறையில் பொது மக்கள் கொண்டாட தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்துத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கவும், பண்டிகை நாளில் பாதுகாப்பான முறையில் பண்டிகையை கொண் டாட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.