tamilnadu

img

கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

கரூர், நவ.21- கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு  உண்ணாவிரதப் போ ராட்டம் நடைபெற்றது. கரூர் நகரில் உள்ள முத்துக்குமார சுவாமி பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு, நவம்பர் 24-ம் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. கரூர் நகரில் டெக்ஸ் டைல்ஸ், பேருந்து கூடு கட்டும் நிறு வனம், கொசுவலை தயாரிப்பு நிறுவனம் என 10 ஆயித்திற்கும் மேற்பட்ட தொழிற் சாலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இப்பணிக்காக தினம்தோறும் லட்சக் கணக்கான தொழிலாளர்கள், பொது மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பேருந்துகளின் எண்ணிக்கை, மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக ரித்து விட்டது. இதனால் பேருந்து நிலை யத்தில் இடநெருக்கடி காரணமாக தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கரூருக்கு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோ ரிக்கை வைத்து வருகின்றனர். இதை தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா கரூருக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தர விட்டிருந்தார். இதையடுத்து கரூர் திரு மாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான அரசு ஆணையும் வழங்கி உத்தரவிடப் பட்டது. அதன் பிறகு, அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக பேருந்து நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொ டர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் 2013ம் ஆண்டு அரசு உத்தரவின்படி திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆளும் கட்சி இதுவரை நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டத்தை தொடர்ந்து கிடப்பில் போட்டுள்ளது. இதுநாள் வரை திருமா நிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. இதையடுத்து திமுக சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட் டம் வியாழன் அன்று நடைபெற்றது. கரூர் மாவட்ட திமுக செயலாள ரும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவு மான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி சிறப்புரையாற்றினார்.  முன்னாள் எம்.பி.கே.சி.பழனிச் சாமி, லாலா நெசவாளர் அணித் தலைவர் ராஜேந்திரன், விவசாய அணி செயலா ளர் சின்னாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, நகர செயலாளர் எம்.ஜோதிபாசு, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இ.ராமர், மதிமுக கே.கே.சிதம்பரம், காங்கிரஸ் மாவட்ட தலை வர் சின்னசாமி, சிபிஐ மாவட்ட செயலா ளர் எம்.ரத்தினம் ஆகியோர் பேசினர். இதில் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.