tamilnadu

img

குளித்தலை அருகே  சந்து கடையை அகற்றக் கோரிக்கை 

 குளித்தலை, அக்.13- கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கருங்கலாப்பள்ளியில் அரசு மதுபானக் கடை இருந்தது. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து கடையை அகற்ற சொல்லி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அந்த மதுபான கடை அகற்றப் பட்டது. அதற்கு பின்பு தற்போது உள்ள அரசு பள்ளி கூடத்திற்கு அருகில் மற்றும் வாய்க்கால் கரையில் இரண்டு இடங்களில் சந்து கடை தனியார் சாராய கடை நடத்தி வரு கிறார்கள்.  இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் சந்து கடையை அகற்ற வலியுறுத்தி கருங்கலாப்பள்ளி சிபிஎம் கிளை செயலாளர் பாண்டியன் தலைமையில் ஊர் பொது மக்கள் குளித்தலை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டுமென குளித்தலை காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று குளித்தலை காவல் ஆய்வாளரிடம் மனு கொடுக்கப்பட்டது போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் முத்துச்செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;