tamilnadu

தமிழகத்தின் உரிமை, வளர்ச்சிக்காக என் குரல் ஒலிக்கும்: ஜோதிமணி

கரூர், மே 27-இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக செயல் பட்டால் மக்களவையில் மோடிக்கு எதிராக போர்க் குரல் எழுப்புவேன் என்று கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி எம்பி தெரிவித்தார்.கரூர் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து போட்டி யிட்ட மக்களவையின் முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரையை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.இதனிடையே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,“ எனது வெற்றியை சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க் கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் நர்மையாக, அர்ப்பணிப் புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடைய வரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது” என்றார்.என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக் குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித் தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக் கொண்டார். திமுக-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர் தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம் பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.மக்களவையில் கரூர் தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்றவற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத் தன் மையை சிதைக்கும் வகையில் பாஜக செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் எழுப்புவேன் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் மோடியின் அடக்குமுறையையும், எடப்பாடி பழனிசாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்ப வில்லை. அதனால்தான் எங்கள் கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள்.