கரூர், ஜூன் 13- தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூரில் கூறினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக மாவட்ட பொறுப்பா ளர் வி.செந்தில்பாலாஜி, கரூர் மக்க ளவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செ.ஜோதிமணி ஆகி யோரை வெற்றி பெறச் செய்த வாக்கா ளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அரவக்குறிச்சி புங்கம் படி கார்னர், பள்ளபட்டி பேருந்து நிறுத் தம், வேலாயுதம்பாளையம் நொய்யல் குறுக்குச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரி வித்தார். அப்போது பள்ளபட்டி பேருந்து நிலையம் பகுதியில் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட திமுக சார்பில் 14 பெண்களுக்கு திரு மண நிதியுதவியாக ரூ.10,000 வீதம் வழங்கிய அவர், அங்கு பெண்களுக் கென அமைக்கப்பட்டிருந்த இலவச தையல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். பின்னர் பள்ளபட்டி நகர திமுக சார்பில் வழங்கப்பட்ட வர வேற்பை ஏற்றுக் கொண்ட அவரிடம், அப்பகுதியினர் பள்ளபட்டி உரூஸ் மைதானம் அருகே நங்காஞ்சி ஆற்றின் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் நீர் நிரப்பி னால் பள்ளபட்டி உள்ளிட்ட சுமார் 4 மைல் தொலைவிற்கு நீர்மட்டம் உயரும். ஆனால் மழைக்காலங்களில் நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் வரும் போது, சிலர் விவசாயத்திற்கு இந்த தண்ணீரை தடுப்பணைக்கு வரும் முன்பே திருப்பி விடுகிறார்கள். இதனால் தடுப்ப ணைக்கு தண்ணீர் வராததால் கடந்த 5 ஆண்டுகளாக பள்ளபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைக்கு நீர் கொண்டு வர வேண்டும். மேலும் தடுப்பணையில் 24 இடங்க ளில் ஓட்டை உள்ளது. இதனால் அணை யை தூர்வாரி, சீரமைக்க அதிகாரிகள் பலரிடம் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தடுப்பணை ஓட்டைகளையும் அடைத்து அணையில் நீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றார். முன்னதாக அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர் பகுதி மற்றும் பவித்திரம் ஜெயந்தி நகரில் நடை பெற்ற திண்ணை பிரச்சாரத்தின் போது, வாக்காளர்கள் மத்தியில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், செல்கிற இடங்களில் எல்லாம் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என மக்கள் கூறுகிறார்கள். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. அதில் வெற்றி பெறுவோம். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் குடிநீர், கழிவு நீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளையும் நிறைவேற்றித் தரு வார்கள். விரைவில் ஆட்சி மாற்றமும் வரப் போகிறது. மக்கள் நினைக்கும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு வந்து சேரும் என்றார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி உறுப்பின ருமான வி.செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, கரூர் எம்பி.செ.ஜோதிமணி, திமுக நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்தி ரன், குளித்தலை எம்எல்ஏ ராமர், க. பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.கரு ணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.